சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

முதல் ஆயிரம்   ஆண்டாள்  
நாச்சியார் திருமொழி  

Songs from 504.0 to 646.0   ( திருவில்லிபுத்தூர் )
Pages:    Previous   1  2    3  4  5  6  7  8  Next
முற்றத்து ஊடு புகுந்து நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்
      கக் கடவையோ? கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண் உற
      நீண்டு அளந்து கொண்டாய் எம்மைப்
பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால் இந்தப்
      பக்கம் நின்றவர் என் சொல்லார்?



[522.0]
சீதை வாயமுதம் உண்டாய் எங்கள்
      சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர்
      சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லி
      புத்தூர் மன் விட்டு சித்தன்தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவு
      இன்றி வைகுந்தம் சேர்வரே             



[523.0]
கோழி அழைப்பதன் முன்னம்
      குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியஞ் செல்வன் எழுந்தான்
      அரவு-அணைமேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம்
      இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம்
      துகிலைப் பணித்தருளாயே



[524.0]
இது என் புகுந்தது இங்கு? அந்தோ
      இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்?
மதுவின் துழாய் முடி மாலே
      மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம்
      வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதிகொண்டு அரவில் நடித்தாய்
      குருந்திடைக் கூறை பணியாய்



[525.0]
Back to Top
எல்லே ஈது என்ன இளமை?
      எம் அனைமார் காணில் ஒட்டார்
பொல்லாங்கு ஈது என்று கருதாய்
      பூங்குருந்து ஏறி இருத்தி
வில்லால் இலங்கை அழித்தாய்
      வேண்டியது எல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம்
      பட்டைப் பணித்தருளாயே



[526.0]
பரக்க விழித்து எங்கும் நோக்கிப்
      பலர் குடைந்து ஆடும் சுனையில்
அரக்க நில்லா கண்ண நீர்கள்
      அலமருகின்றவா பாராய்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய்
      இலங்கை அழித்த பிரானே
குரக்கு-அரசு ஆவது அறிந்தோம்
      குருந்திடைக் கூறை பணியாய்



[527.0]
காலைக் கதுவிடுகின்ற
      கயலொடு வாளை விரவி
வேலைப் பிடித்து என்னைமார்கள்
      ஓட்டில் என்ன விளையாட்டோ?
கோலச் சிற்றாடை பலவும்
      கொண்டு நீ ஏறியிராதே
கோலம் கரிய பிரானே
      குருந்திடைக் கூறை பணியாய்



[528.0]
தடத்து அவிழ் தாமரைப் பொய்கைத்
      தாள்கள் எம் காலைக் கதுவ
விடத் தேள் எறிந்தாலே போல
      வேதனை ஆற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்து ஏறவிட்டுக்
      கூத்தாட வல்ல எம் கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள்
      பட்டைப் பணித்தருளாயே



[529.0]
நீரிலே நின்று அயர்க்கின்றோம்
      நீதி-அல்லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்த்தால்
      ஊழி எல்லாம் உணர்வானே
ஆர்வம் உனக்கே உடையோம்
      அம்மனைமார் காணில் ஒட்டார்
போர விடாய் எங்கள் பட்டைப்
      பூங்குருந்து ஏறியிராதே



[530.0]
Back to Top
மாமிமார் மக்களே அல்லோம்
      மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்
தூமலர்க் கண்கள் வளரத்
      தொல்லை இராத் துயில்வானே
சேமமேல் அன்று இது சால
      சிக்கென நாம் இது சொன்னோம்
கோமள ஆயர் கொழுந்தே
      குருந்திடைக் கூறை பணியாய்



[531.0]
கஞ்சன் வலைவைத்த அன்று
      காரிருள் எல்லிற் பிழைத்து
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய்
      நின்ற இக் கன்னியரோமை
அஞ்ச உரப்பாள் அசோதை
      ஆணாட விட்டிட்டு இருக்கும்
வஞ்சகப் பேய்ச்சிபால் உண்ட
      மசிமையிலீ கூறை தாராய்



[532.0]
கன்னியரோடு எங்கள் நம்பி
      கரிய பிரான் விளையாட்டைப்
பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த
      புதுவையர்கோன் பட்டன் கோதை
இன்னிசையால் சொன்ன மாலை
      ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு
      வைகுந்தம் புக்கு இருப்பாரே



[533.0]
தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிடக்
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே



[534.0]
காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர்
வாட்டம் இன்றி மகிழ்ந்து உறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப் பற்றித் தன்னொடும்
கூட்டு மாகில் நீ கூடிடு கூடலே



[535.0]
Back to Top
பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு
ஆமகன் அணி வாணுதல் தேவகி
மா மகன் மிகு சீர் வசுதேவர்தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே



[536.0]
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பு ஏறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன்மேல் நடம் ஆடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே



[537.0]
மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மத யானை உதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே



[538.0]
அற்றவன் மருதம் முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையிற்
செற்றவன் திகழும் மதுரைப் பதிக்
கொற்றவன் வரில் கூடிடு கூடலே



[539.0]
அன்று இன்னாதன செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல்-கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே



[540.0]
Back to Top
ஆவல் அன்பு உடையார் தம் மனத்து அன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்து விளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே



[541.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Thu, 09 May 2024 20:23:06 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham song